தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Thursday, December 3, 2009

பாபர் மசூதி இடிப்பு-17 ஆண்டுகளுக்குப் பின் லிபரான் கமிஷன் அறிக்கை தாக்கல்


* அயோத்தில் 16-ம் நூற்றாண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததாகவும் அதை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டியதாகவும் இந்துக்கள் தரப்பில் கூறினார்கள். இதனால் அப்போதில் இருந்தே பிரச்சினைகள் ஏற்பட்டன.

* 1949 டிசம்பர் 22 :- இந்துக்கள் சிலர் இரவோடு இரவாக பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை கொண்டு வந்து வைத்தனர். இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கோர்ட்டு உத்தரவுபடி இந்து- முஸ்லிம்கள் யாருமே அங்கு செல்ல முடியாதபடி பூட்டப்பட்டது.

* 1984 :- பாபர் மசூதியை திறந்து இந்துக்கள் வழிபாட நடத்த அனுமதிக்க வேண்டும் என்று விசுவஇந்து பரிஷத் அமைப்பினர் பெரிய அளவில் போராட்டத்தை தொடங்கினார்கள். இது ராமர் பிறந்த இடம் எனவே இந்துக்களுக்குதான் சொந்தம் என்று அவர்கள் உரிமை கொண்டாடினார்கள்.

* 1986 பிப்ரவரி :- இது தொடர்பான வழக்கு பைசாபாத் கோர்ட்டில் இருந்தது. நீதிபதி இதில் தீர்ப்பு வழங்கினார். இந்துக் களும், பாபர் மசூதிக்குள் சென்று வழிபடலாம். இதற்காக பாபர் மசூதியை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

* 1989 நவம்பர்-9 :- ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது பிரச்சினைக்கு அப்பாற்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை செய்ய அனுமதி அளித்தார்.

* 1990 செப்டம்பர்-25 :- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை வற்புறுத்தி பாரதீய ஜனதா தலைவர் அத்வானி குஜராத் மற்றும் சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு ரதயாத்திரை தொடங்கினார்.

* 1990 நவம்பர்:- பீகார் மாநிலம் சமஸ்திபூரில் அத்வானி ரத யாத்திரை சென்றபோது லல்லு பிரசாத் யாதவ் அரசு அவரை கைது செய்தது. அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் உத்தரவின் பேரில் இந்த கைது நடந்தது. வி.பி.சிங் அரசுக்கு பாரதீய ஜனதா அப்போது ஆதரவு அளித்து வந்தது. அத்வானியை கைது செய்ததால் ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் வி.பி.சிங் அரசு கவிழ்ந்தது.

*1992 டிசம்பர்-6 :- ராமர் கோவில் கட்டும் கரசேவைக்காக லட்சக்கணக்கான இந்துக்கள் அயோத்தியில் திரண்டு இருந்தனர். அவர்கள் மசூதியை முற்றிலும் இடித்து சிறிய அளவில் ராமர் கோவிலை அமைத்தனர். இதனால் நாடு முழு வதும் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

* 2003 மார்ச்-12 :- பிரச்சினைக்குரிய இடத்தில் ராமர் கோவில் தான் இருந்ததா? என தொல்லியல் துறை ஆய்வு நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

* 2009 ஜூன்-30 :- பாபர் மசூதி இடிப்பு சதி தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரான் கமிஷன் 17 ஆண்டு விசாரணைக்கு பிறகு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails