தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Thursday, December 24, 2009

சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும்..

நாளிதழ்கள் வாரந்-தோறும் ஆன்மிகச் சிறப்பு இதழ்களைப் போட்டி போட்டுக்-கொண்டு வெளியிடுகின்-றன. பண்டிகைகள் வந்து-விட்டால் அவற்றின் பெய-ராலும் சிறப்பிதழ்கள் வந்துவிடும். புத்தாண்டு பிறக்கிறதா? உடனே “புத்-தாண்டுப் பலன்கள்’’ என்ற தலைப்பில் தலை-காட்டும்.


இதில் என்ன வேடிக்கை என்றால், ஆங்-கிலப் புத்-தாண்டுக்கும்கூட இது-போன்ற சிறப்பிதழ்கள்; ஆங்கிலப் புத்தாண்டுக்-கும், இந்து மத ராசி பலன்-களுக்கும் என்ன சம்பந்தம்?

சங்கராச்சாரியார்கள்கூட சொல்லிப் பார்த்தார்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்-காக கோயில் நடையைத் திறக்காதீர்கள்; இரவில் இந்து மதக் கோயில்-களைத் திறந்து வைப்பது, சாஸ்திர விரோதம் -_ ஆகம விரோதம் என்று அவர்கள் கத்திப் பார்த்து என்ன பிரயோசனம்?

கோயில் நடைகள் திறக்கப்பட்டன; பட்டர்-களுக்கும், பார்ப்பனர்-களுக்-கும் வருவாய்க் குவியல்; சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவார்-களா, என்ன?

ஆன்மிக இதழில் கை சரக்குகளை அவிழ்த்துக் கொட்டுபவர்கள் சர்வ ஜாக்-கிரதையாக சில வார்த்-தைகளைப் பயன்படுத்து-வதைக் கவனிக்கவேண்-டும்.

மக்கள் நம்பிக்கை; .... என்பது புராணம்; ..... என்பது அய்திகம்; .... என்பது புராணம் என்று கழுவும் மீனில் நழுவும் மீனாக வார்த்தைகளைக் கையாளுவார்கள்.

இவர்கள் எழுதுவதை நம்பி பக்தர்கள் கடை-பிடித்து காரியம் ஆகா-விட்டால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாமே _ அல்-லது ‘நீ வெளியிட்டதை நம்பித் தானே இந்தக் காரியத்தில் இறங்கினேன்; கடைசியில் காரியம் கெட்டுப் போய்விட்டதே’ என்று பக்தர்கள் சண்-டைக்கு வந்தால் என்ன செய்-வது? அதற்காகத்தான் இத்தகைய ஏமாற்று வார்த்தைகள்.

ஒரு மாலை ஏட்டின் புத்தாண்டு சிறப்பிதழில் ஒரு செய்தி:

கடன் வாங்கி திரும்-பக் கொடுக்க முடியாமல் தவிப்பவர்களுக்கென்றே தஞ்சை மாவட்டம் திருச்-சேறையில் சாரபரமேஸ்-வர் கோயில் உள்ளது. இவர் ரண ருண ஈஸ்வரர் என்று அழைக்கப்படு-கிறார். ரணம் என்றால் நோய், ருணம் என்றால் கடன் என்று பொருள்.

இந்த சிவனைப் பூஜிப்-பதன் மூலம் கடன் தொல்லை நீங்கும் என்-பது பக்தர்களின் நம்-பிக்கை.

இப்படியாக எழுது-கிறது அந்த இதழ்.

கடன் தொல்லை எப்படி நீங்கும்? கடன் கொடுத்தவன் கேட்கமாட்-டானா? அல்லது கடன் வாங்கியவன் திருப்பிச் செலுத்த அவன் பீரோவுக்-குள் நோட்டுக் கத்தை-களை கொண்டு வந்து சிவன் திணித்துவிட்டுப் போய்விடுவாரா? (சிவன், கள்ள நோட்டு அடிப்-பாரோ!).

இன்னொரு வகையில் பார்த்தால், துணிந்து கடனை வாங்கிக்கொண்டு, திருப்பிச் செலுத்த வேண்-டியதில்லை; சிவன் பார்த்-துக் கொள்வான் என்கிற மோசடி எண்ணத்தைத்-தானே இந்த ஆன்மிகம் கற்றுக் கொடுக்கிறது? மக்-களை மோசடி செய்யத் தூண்டும் இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்படவேண்டாமா?
- விடுதலை (23.12.09) மயிலாடன்

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails