தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Monday, November 30, 2009

பெரியாரின் சீர்திருத்தம்


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், நாம் இன்று பேசும் நடைமுறைத் தமிழில் சில குறைகளைக் கண்டு அவற்றை நீக்கி, அவற்றை மிக எளிமையாகக் கையாளும் மிகச் சுலபமான வழியைக் காட்டினார். 20 – ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவர் காட்டிய “தமிழ் எழுத்துச் சீர்திருத்த” நெறியை அனைவரும் ஏற்று நடைமுறைப்படுத்தினர். தமிழக அரசும் இதனை ஏற்று நடைமுறைப்படுத்தியது.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள் நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் மிக்கவர். அவரே தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அதாவது ணு,று,னு, என்னும் எழுத்துக்களை நெடிலாக மாற்ற துணைக் கால்களைப் புகுத்தினார். “ண+ =ண, ற+ற , ன+ =ன , என மாற்றி எளிதாக்கினார். மேலும் மேல் விலங்குகள் பூட்டப்பட்ட லை,ளை,ணை,னை, போன்ற நான்கு எழுத்துக்களிலிருந்த மேல் விலங்குகளைப் போக்கி அதற்குப் பதிலாக லை, ளை, ணை, னை, ஐகார ஒலி ஒலிக்கும் படி “னை, ஐகார குறியை இணைத்து +ன=னை எனப் புதுமையைப் புகுத்தி மொழி பயில எளிய முறையைக் கையாண்டார் குறிகளின் இன ஒற்றுமையை நிலை நாட்டினர்.

இத்தோடு நிற்காமல் மேலும் சில குறைகளைக் கண்ணுற்று நீக்க முனைந்தார். மேலும் தந்தை பெரியார். “அய்” “அவ்” என்ற “ஐ” ,”ஔ” இரண்டையும் நீக்கும் சிந்தனையில் மூழ்கினார். அவர் விட்ட இடைவெளியிலிருந்து மேலும் முயன்று சீர்காணும் நோக்கோடு அனைவரும் செயல்படுவோம்.

தந்தை பெரியார் அவர்கள் இந்த 20-ஆம் நூற்றாண்டின் இணையற்ற சுய சிந்தனையாளர். நம் தமிழ் மொழி தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகிற்கே பயன்படவேண்டும் எனச் சிந்தித்துச் செயல்பட்டார். தமிழ் எழத்துக்களின் எண்ணிக்கையை 247-லிருந்து கணிசமான எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என ஓங்கிக் குரல்கொடுத்தார். தந்தைபெரியாரின் எழுத்துச் சீர்திருத்தப் பணிகளில் தாமே முன்நின்று வழி நடத்தினார்.

அவர் நமக்கு உணர்த்திச் சென்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நாம் மேற்கொள்வோம். தமிழ் வரி வடிவங்களின் மாற்றங்களை ஏற்க வேண்டும். தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் எல்லோரும் ஏற்கத் தக்க எளிமையான சில எழுத்துவரி வடிவ மாற்றத்தைக் கண்டு நடைமுறைப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, எழுத்துச் சீர்திருத்தம் முழு அளவில் நிறைவுடையதாக அமைக்க அனைவர் சிந்தனைகளையும் செயல்பட விடுவோம்.

தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தங்கள் அல்லது 20 -ஆம் நூற்றாண்டின் எழுத்துச் சீர்திருத்தங்கள் எனலாம்.

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails