தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Tuesday, November 10, 2009

தமிழா திருந்து

எங்கள் நாட்டில்
எல்லா திசைகளில் இருந்தும்
கடல், அலைகளை
அள்ளி வருகிறது-ஆனால்
தென் திசை கடல்
மட்டும் அகதிகளை
அள்ளி வருகிறது.
பஞ்சாபிலிருந்து வந்தால்
"பஞ்சாபி"
ராஜஸ்தானிலிருந்து வந்தால்
"ராஜஸ்தானி"
கேரளத்திலிருந்து வந்தால்
"மலையாளி"
பாகிஸ்தானில் இருந்து வந்தால் கூட
அவன் "பாகிஸ்தானி"
ஈழத்திலிருந்து வந்தால் மட்டும்
ஏனடா "அகதி" .
தமிழா திருந்து!

தமிழ் ஈழம் மட்டுமே
இந்த வலிகளுக்கெல்லாம்
மருந்து!!!!!
உடல் இருபதோ தமிழகத்தில், உள்ளம் இருபதோ ஈழத்தில்........

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails