தினம் ஒரு ''காசி ஆனந்தன்'' கவிதை

முரண்.. இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை நாயே! பன்றியே! குரங்கே!

Sunday, November 29, 2009

ஆபிரகாம் கோவூர்


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

கேரளாவைச் சேர்ந்த திருவள்ளா என்னும் ஊரில் பிறந்த கோவூர் வண. கோவூர் தொம்மா கத்தனார் என்பவரின் புதல்வர். கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் ஆசிரியரானார். தனது இறுதிக் காலத்தை கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராக பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் இளைப்பாறினார். சிறுநீர்ப்பையில் புற்று நோயால் அவதியுற்றாலும், இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார்.
தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. Rationalist Association of Sri Lanka என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார், அவரது தொழில் உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர்

No comments:

இன்னொறு இடுகை

Related Posts with Thumbnails